Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | ஓட்டம் முன்னதா, அச்சம் முன்னதா? | பெ. தூரன்

ள்ளக் கிளர்ச்சிகள் எத்தனை என்பது பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன்னலெல்லாம் பெரிய பெரிய பட்டியல்கள் வெளியிடுவதுண்டு. ஒவ்வொரு கிளர்ச்சியின் தன்மையென்ன, அதனோடு தொடர்புள்ள இயல்பூக்கம் என்ன, அது பிறப்பிலிருந்தே உண்டானதா அல்லது சூழ்நிலையால் தோன்றியதா என்று இப்படியெல்லாம் ஆராய்ச்சிகள் நடைபெறும்.
நடத்தைக் கொள்கை உளவியலைத் தோற்றுவித்த வாட்ஸன் என்பவர் பச்சைக் குழந்தைகளைக் கொண்டு ஆராய்ச்சிகள் நடத்தியதன் பயனாக மனிதனுக்கு அச்சம், இனம், அன்பு என்ற மூன்று உள்ளக் கிளர்ச்சிகள்தான் இயல்பாகவே அமைந்திருக்கின்றன என்று கூறினார். இவர் கூறியதைப் பொதுவாக எல்லாரும் ஆமோதித்தார்கள்.
ஆனால் அண்மையிலே சில உளவியலறிஞர்கள் செய்த ஆராய்ச்சியின் விளைவாக மேலே கூறியவாறு குழந்தைகளின் உள்ளக் கிளர்ச்சிகள் தெளிவாகவும் தனித்தனியாகவும் இருக்கின்றனவா என்பதில் ஐயம் தோன்றியிருக்கிறது.
குழந்தைப் பருவத்திலேயே உள்ளக் கிளர்ச்சிகள் இருக்கின்றன என்பதை மட்டும் நாம் தெரிந்து கொண்டால் போதும். அதற்கு மேற்பட்ட ஆராய்ச்சிகளை உளவியல் அறிஞர்களுக்கு விட்டுவிடலாம்.
உள்ளக் கிளர்ச்சியைப் பற்றி இன்னும் ஒரு வேடிக்கையான விவாதம் உண்டு. உள்ளக் கிளர்ச்சி முதலில் தோன்றி அதன் விளைவாகச் செயல் நடைபெறுகிறதா அல்லது செயல் நடைபெற்று அதன் விளைவாக உள்ளக் கிளர்ச்சி தோன்றுகிறதா என் பதிலே பெரிய விவாதம் ஏற்பட்டுவிட்டது.
மனத்திலே துயரம் உண்டாகிறது; அதனால் ஒருவன் அழுகிறான் என்று நாம் சொல்லுகிறோம். அதுதான் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வில்லியம் ஜேம்ஸ் என்ற உளவியலறிஞரும், கார்ல் லாங் என்ற உடலியல் வல்லுநரும் நமது நம்பிக்கைக்கு முற்றிலும் மாறான ஒரு கருத்தைப் புதிதாக வெளியிட்டார்கள். “முதலில் மனிதன் அழுகிறான்; பிறகுதான் துயரம் என்ற உள்ளக் கிளர்ச்சி தோன்றுகிறது” என்று அவர்கள் கூறினார்கள். அதாவது உடலிலே மாறுதல்கள் ஏற்பட்ட பிறகே அவற்றிற்கேற்ற உள்ளக் கிளர்ச்சிகள் எழுகின்றன என்று அவர்கள் வாதித்தார்கள்.
இந்தக் கொள்கை உண்மையென்றும் உண்மையன்று என்றும் நிலைநாட்ட எத்தனையோ சோதனைகள் நடந்திருக்கின்றன. “நீ முதலில் ஒட்டம் பிடிக்கிறாய்; பிறகுதான் அச்சம் தோன்றுகிறது" என்று கூறினால் சிரிக்கத்தான் தோன்றும். ஆனால் அவ்வளவு எளிதாக இக்கொள்கையை ஒதுக்கித்தள்ளிவிட இதுவரையிலும் முடியவில்லை.
ஷெரிங்டன், கானன் என்ற இருவர் தாங்கள் செய்த ஆராய்ச்சிகளைக் கொண்டு இக்கொள்கை தவறானது என்று காட்ட சில ஆண்டுகளுக்கு முன்னே முயன்றார்கள். ஆனால் இவர்களுடைய ஆராய்ச்சிகளைக் கொண்டு இக்கொள்கையை முடிவாக மறுக்க முடியாது என்று ஆங்கெல் என்ற மற்றொரு அறிஞர் தக்க காரணங்களுடன் விளக்கியிருக்கிறார்.
இந்த விவாதத்தின் முடிவு எப்படியானலும் உள்ளக் கிளர்ச்சிகளைப் பற்றிப் பொதுவாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகளை அது பெரிதும் மாற்றிவிடாது.
நமது உடம்பின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையான சுரப்பிகள் (Glands) இருக்கின்றன. வாயில் உமிழ்நீர் சுரப்பது ஒருவகைச் சுரப்பியால் தான். வளர்ச்சிக்கு உதவ ஒருவகைச் சுரப்பி இருக்கிறது. இப்படிப் பல சுரப்பிகள் இருந்து பல வேலைகளைச் செய்கின்றன.
சுரப்பிகளிலே நாளமில்லாத சுரப்பிகள் சில உண்டு. அவை தம்மிடத்துச் சுரக்கும் சுரப்புப் பொருளை நேராக இரத்தத்தில் கலக்கும்படி செய்கின்றன. அவைகள் உள்ளக் கிளர்ச்சிகளால் உடம்பிலும் செயலிலும் ஏற்படும் மாறுதல்களுக்குக் காரணமாக இருக்கின்றனவென்று கண்டிருக்கிறார்கள். ஆட்ரீனல் என்ற சுரப்பி சிறுநீர்ப் பைக்கு மேலே இருக்கிறது. வலி, அச்சம், சினம் ஆகிய கிளர்ச்சிகளால் அந்தச் சுரப்பி பாதிக்கப்படுகிறது என்றும் செயற்கை முறையிலே அச்சுரப்பி நீரை ஒருவனுடைய இரத்தத்தில் சேரும்படி செய்தால் அச்சத்தால் ஏற்படும் உடல் மாறுபாடுகளெல்லாம் உண்டாகிறதென்றும் கானன் என்பார் ஆராய்ந்து கண்டிருக்கிறார். இவ்வாறே மற்றச் சுரப்பிகளின் தன்மைகளையும் ஆராய்ந்து கூறியிருக்கிறார்.
சுரப்பிகள் அல்லது மற்ற உடல் உறுப்புகளின் செய்கைகளால் உள்ளக் கிளர்ச்சிகள் தோன்றுவதானாலும் அல்லது உள்ளக் கிளர்ச்சிகளால் உறுப்புகளின் செய்கைகள் மாறுபாடடைவதானாலும் மனிதனுடைய வாழ்க்கையிலே ஏற்படும் விளைவு ஒன்றுதான். இழிந்த உள்ளக் கிளர்ச்சிகளுக்கு ஆட்பட்ட மனிதன் வீழ்ச்சியடைகிறான். அவற்றிற்கு ஆட்படாமல் அவற்றை உயர்மடைமாற்றம் செய்துகொண்டவன் உயர்வடைகிறான். இந்த உண்மையைத்தான் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அறிவு, பகுத்தறிவு என்றெல்லாம் நாம் பேசுகிறோம். ஆனால் உள்ளக் கிளர்ச்சிகளே ஒருவனுடைய செயல்களுக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. நல்ல பழக்கங்களையும், பற்றுதல்களையும், குறிக்கோள்களையும் உண்டாக்கிக் கொள்வதாலும், மனத்திட்பத்தாலும் ஒருவன் தனது உள்ளக் கிளர்ச்சிகளை நல்வழிப்படுத்திக்கொள்ள முடியுமானால் அவன் மேம்பாடடையலாம். மனச்சான்றும் அறிவும் இம்முயற்சியிலே அவனுக்குத் துணையாக நிற்க வேண்டும்.

Comments

Most Popular

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...